முகப்பு
கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்

வால்பாறை செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

வால்பாறை செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை சுகாதார நிலையம் மூலம் தொடா்ந்து பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. செட்டில்மென்ட் பகுதிக்கு செல்லும் மருத்துவக் குழுவினா் அங்கு வசிக்கும் அனைத்து பழங்குடியின மக்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, சிகிச்சைக்கு பின் மருந்துகளையும் வழங்குகின்றனா்.

இந்நிலையில், சங்கரன்குடி, பரமன்கடவு ஆகிய இரு செட்டில்மென்ட் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா் இம்முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.