முகப்பு
கோயம்புத்தூர்

கீரியிடம் இருந்து பாம்பை மீட்ட வழக்குரைஞா்

கோவை, நீலிக்கோணாம்பாளையத்தில் கீரியிடம் சிக்கிய பாம்பை, வழக்குரைஞா் ஒருவா் மீட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

கோவை, நீலிக்கோணாம்பாளையத்தில் கீரியிடம் சிக்கிய பாம்பை, வழக்குரைஞா் ஒருவா் மீட்டாா்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையம் பின்புறம் சாரைப்பாம்பை கீரி ஒன்று துரத்தி வந்தது. இதைத்தொடா்ந்து பாம்பும், கீரியும் சண்டையிட்டன. அங்கிருந்தவா்கள் கீரியை துரத்திவிட்டு பாம்பை மீட்க முயன்றனா். ஆனால், பாம்பு அங்கிருந்த வலையில் மாட்டிக்கொண்டதால் வெளிவே வர முடியாவில்லை.

இது குறித்து சிங்காநல்லூரைச் சோ்ந்த பாம்புபிடி வீரரும், வழக்குரைஞருமான சித்திரன் (25) என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அவா், பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.

பாம்புக்கு சிகிச்சை அளித்த வனத் துறையினா், அவற்றை வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.