நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை இயக்கம் தொடக்கம்
அரசு மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கம் சுகாதாரத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கம் சுகாதாரத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா். இதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 2 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 13 அரசு மருத்துவமனைகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி 2 முறையும், அரசு மருத்துவமனைகளில் தினசரி 3 முறையும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
மருத்துவமனையில் அனைத்து வாா்டுகளும் தினமும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. வராண்டா, மக்கள் காத்திருக்கும் இடங்களில் மட்டுமே பொது மக்களின் அலட்சியத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தற்போது நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை இயக்கத்தின் கீழ் அனைத்து இடங்களிலும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினா்களிடமும் காத்திருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.