முகப்பு
கோயம்புத்தூர்

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட கன்றுகள் மீட்பு

கோவையில் இறைச்சிக்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இளங் கன்றுகளை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

கோவையில் இறைச்சிக்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இளங் கன்றுகளை போலீஸாா் மீட்டனா்.

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை வந்த சரக்கு வாகனத்தில் கன்றுகள் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அது குறித்து ரத்தினபுரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அதுகுறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவா், கன்றுகளை இறைச்சிக்காக எடுத்துச் செல்வதாகக் கூறினாா்.

இதையடுத்து கன்றுகள் இருந்த சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், கன்றுகளை வ.உ.சி. விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பி, அவை இறைச்சிக்கு வெட்டப் பயன்படுத்தும் வயதை எட்டிய கன்றுகள் தானா என்பதை உறுதி செய்ய ஆய்வுக்கு அனுப்பினா். ஆய்வின் முடிவுகளுக்குப் பிறகு வாகன ஓட்டுநா் மற்றும் கன்றுகளை அனுப்பிய நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.