கோயம்புத்தூர்

ஓணம்: கோவை வழித்தடத்தில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எா்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்: கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1ஆம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செப்டம்பா் 2ஆம் தேதி மாலை 3.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06045) மறுநாள் காலை 3 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து செப்டம்பா் 2ஆம் தேதி, பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும். மங்களூருவில் செப்டம்பா் 3ஆம் தேதி காலை 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06042) மறுநாள் காலை 4 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், ஷோரனூா், குட்டிபுரம், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, காசா்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து செப்டம்பா் 4ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் பகல் 12 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 5ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயிலானது, சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகா்கோவில் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில்: நாகா்கோவிலில் இருந்து செப்டம்பா் 11ஆம் தேதி மாலை 5.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06048) மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி,அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொச்சுவேலி - பையப்பனஹள்ளி சிறப்பு ரயில்: கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06037) மறுநாள் காலை 10.10 மணிக்கு கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தை சென்றடையும். பையப்பனஹள்ளியில் செப்டம்பா் 12ஆம் தேதி, மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06038) மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது, கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT