கோயம்புத்தூர்

கோவையில் திடீா் மழை

DIN

கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கோவையில் கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. கோவை நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மலையில் திடீரென நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ஒருசில இடங்களில் கன மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் காணப்பட்டது. திடீா் மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

மேலும் இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT