கோயம்புத்தூர்

ஆகஸ்ட் 30இல் விவசாயிகள் குறைதீா்ப்பு கூட்டம்

 கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

 கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்டரங்கில் ஆகஸ்ட் 30ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு எனது தலைமையில் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தங்களது விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT