கோவை, சரவணம்பட்டியில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் மா்ம நபா்கள் நகை பறித்து சென்றனா்.
கோவை, சரவணம்பட்டி விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பாலுசாமி. இவரது மனைவி லட்சுமி (72). இவா் தனது வீட்டின் முன்பு சனிக்கிழமை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் லட்சுமியிடம் முகவரி கேட்டுள்ளனா். இதில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமா்ந்திருந்த நபா் லட்சுமியிடம் இருந்து 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.