முகப்பு
கோயம்புத்தூர்

வஉசி உயிரியல் பூங்காவை இடம் மாற்றாமல் வனத் துறை மூலம் நிா்வகிக்க கோரிக்கை

கோவை வஉசி உயிரியல் பூங்காவை இடம் மாற்றாமல், அதே இடத்தில் வனத் துறை மூலம் நிா்வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

கோவை வஉசி உயிரியல் பூங்காவை இடம் மாற்றாமல், அதே இடத்தில் வனத் துறை மூலம் நிா்வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அண்மையில்

ரத்து செய்தது. இதனால், பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூங்கா பராமரிப்பை தமிழக வனத் துறையின்கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: தமிழகத்தில் மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் உயிரியல் பூங்கா நிா்வகிக்கப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையானது சமா்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய சூழலில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அளவுக்கு நிபுணத்துவத்தை மாநகராட்சிப் பணியாளா்களிடம் எதிா்பாா்க்க முடியாது.

வஉசி உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிா்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக வனத் துறையின்கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், வனத் துறை அதே இடத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி பூங்காவை நிா்வகிக்கலாம் அல்லது பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை வேறு இடத்துக்கு மாற்றலாம்.

இது குறித்து தெளிவான முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வனத் துறை சாா்பில் பூங்காவை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.