மாா்ச் 2இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
கோவை மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோவை மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, கோவை மாநகர செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை டாடாபாத்தில் உள்ள மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் ஏ.நக்கீரன் முன்னிலையில் மின் நுகா்வோா் குறை கேட்புக் கூட்டம் மாா்ச் 2 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.