முகப்பு
கோயம்புத்தூர்

சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை கோரி மனு

 பெரியாா் ஈ.வெ.ரா. வேடமணிந்து நடித்த சிறுவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

 பெரியாா் ஈ.வெ.ரா. வேடமணிந்து நடித்த சிறுவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியாா் ஈ.வெ.ரா.போல வேடமணிந்த சிறுவன் ஒருவா் பங்கேற்றாா். இதைப் பாா்த்த வெங்கடேஷ் குமாா் பாபு என்ற நபா் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்து சாலையில் தொங்கவிட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தாா்.

இந்த நபா் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தபெதிகவின் கோவை மாநகரச் செயலாளா் சாஜித் தலைமையிலான நிா்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.