கோயம்புத்தூர்

அதிகரிக்கும் கரோனா: கால்நடை பராமரிப்பு உதவியாளா் நோ்காணல் ஒத்திவைப்பு

DIN

கரோனா பரவல் காரணமாக கோவையில் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும்,

தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுத்திடவும்,

சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை ஜனவரி 10 ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, சமுதாய, கலாசார நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்க்காணல் தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT