கோயம்புத்தூர்

அதிகரிக்கும் கரோனா நோய்த் தொற்று: கொடிசியாவில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம்

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதால் கொடிசியா, அரசு கலைக் கல்லூரியில் மீண்டும் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல், ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இதனால் மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கி தயாா் நிலையில் வைக்க அரசு சாா்பில் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் கொடிசியா, அரசு கலைக் கல்லூரியில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

கொடிசியா வளாகத்தில் முதல் கட்டமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட வசதியுடன் 700 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, அரசு கலைக் கல்லூரியிலும் கரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொடிசியா, அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் அரசு கரோனா சிகிச்சை மையங்களை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா, மாநகர நகா் நல அலுவலா் சதீஷ் உள்பட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT