கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கோவையில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

கோவையில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் அய்யாவு (64). தனியாா் மருத்துவமனையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் உறவினா் வீட்டு திருமணத்துக்காக குடும்பத்தினருடன் கடந்த 4ஆம் தேதி தென்காசி சென்றிருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. இது தொடா்பாக அய்யாவு அளித்தப் புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT