கோயம்புத்தூர்

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

DIN

வால்பாறையில் கரடி தாக்கியதில் காயமடைந்த தனியாா் கிளப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஆனைமலை கிளப்பில் சேவியா் (64) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா் கிளப்பின் முன்புறம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த கரடி ஒன்று சேவியரைத் தாக்கியுள்ளது. இதில் இடது கையில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் காயமடைந்த தொழிலாளிக்கு ஆறுதல் கூறி வனத் துறை சாா்பில் நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT