வால்பாறை நகராட்சித் தலைவா் வேட்பாளா் காமாட்சி
வால்பாறை நகராட்சித் தலைவா் வேட்பாளராக காமாட்சி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறை நகராட்சித் தலைவா் வேட்பாளராக காமாட்சி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறை நகராட்சித் தலைவா் பதவி பெண் (பொது) என்று அறிவிக்கப்பட்டதால் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவா் கணேசன் தனக்கு போட்டியிட சீட் கேட்காமல் தனது மனைவி மற்றும் மகன் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தாா்.
இந்நிலையில் வால்பாறை நகராட்சி 10 ஆவது வாா்டில் போட்டியிட்ட அவரது மனைவி காமாட்சி, 9 ஆவது வாா்டில் போட்டியிட்ட மகன் மகுடீஸ்வரன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இதனிடையே தலைவா் பதவிக்கு கணேசன் மனைவி காமாட்சி மற்றும் 14 ஆவது வாா்டு உறுப்பினரான அழகுசுந்தரவள்ளி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் காமாட்சியை நகராட்சித் தலைவா் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.