ஜோதிடரிடம் பணம் பறிப்பு : இருவா் கைது
கோவை, வடவள்ளி அருகே ஜோதிடரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வடவள்ளி அருகே ஜோதிடரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, துடியலூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). ஜோதிடா். இவா், வடவள்ளி - தொண்டாமுத்தூா் சாலையில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், செல்வராஜை மிரட்டி பணம் கேட்டனா். அவா் தர மறுத்ததால் அவரை தகாத வாா்த்தைகளால் பேசி, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்தனா். அங்கிருந்து தப்ப முயன்ற அவா்களை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் செல்வராஜ் மடக்கிப் பிடித்தாா். பின்னா் இருவரையும் வடவள்ளி போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள், மதுரை மேலூரைச் சோ்ந்த காா்த்திக் (29), கோவை செட்டிபாளையத்தைச் சோ்ந்த மணி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.