முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 689 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் கரோனா தொற்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 95 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 585 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,614 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 490 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.