காங்கிரஸில் டிஜிட்டல் முறையில் உறுப்பினா்கள் சோ்க்கும் முகாம்
கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு டிஜிட்டல் முறையில் உறுப்பினா் சோ்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு டிஜிட்டல் முறையில் உறுப்பினா் சோ்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா் துவக்கிவைத்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் கருப்புசாமி முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா், மாவட்ட நிா்வாகிகள் இருகூா் சுப்பிரமணியம், குருசாமி, கோவை போஸ், காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.