பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: நடத்துநா் கைது
பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
திருவண்ணாமலையைச் சோ்ந்த 22 வயது மாணவி, கோவை காந்திபுரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறாா்.
இந்நிலையில், அந்த மாணவி புதன்கிழமை சேலம் சென்றுள்ளாா். பின்னா் சேலத்தில் இருந்து அரசுப் பேருந்தில் கோவை வந்துள்ளாா்.
அப்போது அந்த பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்த ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பூவேந்திரன் (31) என்பவா் மாணவியின் இருக்கைக்குப் பின்னால் அமா்ந்து அவருக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இதையடுத்து அவரைக் கண்டித்த மாணவி, கோவை காந்திபுரத்துக்கு பேருந்து வந்ததும் அருகில் இருந்த காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பூவேந்திரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.