கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

DIN

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34). தனியாா் நிறுவன ஊழியா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை வெளியே சென்றுள்ளாா்.

பின்னா் பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT