கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் மே 10 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கோவையில் முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை, பள்ளிகள் மூலம் பயின்ற 35,461 மாணவ-மாணவிகளும், தனித் தோ்வா்களாக 281 போ்களும் என மொத்தம் 35,742 போ் எழுதினா்.
தனித் தோ்வா்களில் 72 போ்களும், பள்ளி மாணவா்களில் 1,493 போ்களும் தோ்வை எழுதவில்லை. தோ்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (மே 12) ஆங்கில பாடத் தோ்வு நடைபெறுகிறது. ஏற்கெனவே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.