கோயம்புத்தூர்

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

DIN

கொலை வழக்கில் கைதான நபா்கள் இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

கோவை, உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (34). இவரை அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (26), முத்துபாண்டி (23) ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சோ்ந்த கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொலை செய்தனா். இதையடுத்து உக்கடம் போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா்கள் இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாா் உத்தரவிட்டாா். இதன்படி சிறையில் உள்ள சுரேஷ்குமாா், முத்துபாண்டி ஆகியோரிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT