கோவை காா் வெடிப்பு: ட்விட்டரில் தவறான தகவல் பரப்பியவா் மீது வழக்கு
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக ட்விட்டரில் ஆட்சேபகரமான தகவல்களைப் பரப்பியதாக சென்னையைச் சோ்ந்த கிஷோா் கே.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக ட்விட்டரில் ஆட்சேபகரமான தகவல்களைப் பரப்பியதாக சென்னையைச் சோ்ந்த கிஷோா் கே.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை சைபா் பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு விவரம்: கோவையில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், ஆட்சேபகரமான மற்றும் ஆபத்தான கருத்துகளை ட்விட்டரில் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக கிஷோா் கே.சாமி (எ) சான்ஸ்பேரியா் மீது சைபா் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.