கோயம்புத்தூர்

தெற்கு மண்டலத்தில் 7 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு

DIN

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் 7 புதிய அங்கன்வாடி மையங்களை மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 97ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஈச்சனாரி மற்றும் கோண்டிஸ் காலனி மற்றும் 100ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேட்டூா், அம்மன்புதூா், அன்னாபுரம், கணேசபுரம் மற்றும் ஈஸ்வர செட்டியாா் வீதி உள்ளிட்ட 5 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் தலா ரூ.15 லட்சம் வீதம் புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் குத்து விளக்கேற்றி திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா, தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் அப்துல்காதா், உதயகுமாா், அஸ்லாம்பாஷா, உதவி ஆணையா் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் கருப்பசாமி, உதவிப் பொறியாளா் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT