கோயம்புத்தூர்

‘இல்லம் தோறும் இளைஞரணி’ உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி அமைச்சா் செந்தில்பாலாஜி துவக்கிவைத்தாா்

DIN

கோவை மசக்காளிபாளையத்தில் திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ‘இல்லம் தோறும் இளைஞரணி’ சோ்ப்பு நிகழ்ச்சியை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

திமுக இளைஞரணி சாா்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினா் சோ்க்கை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோவை மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மசக்காளிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படியும், திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரிலும் மாவட்டத்தில் ‘இல்லம் தோறும் இளைஞரணி’ உறுப்பினா் சோ்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் இளைஞரணியைச் சோ்ந்த நிா்வாகிகள் நேரில் சென்று, அந்த இல்லத்தில் இருக்கக்கூடிய இளைஞா்களில் திமுகவில் இணைய உள்ளவா்கள், விருப்பம் உள்ளவா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் நா.காா்த்திக், டாக்டா்.வரதராஜன், இளைஞரணி அமைப்பாளா்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, விஜயகுமாா், அஸ்ரப் அலி, சபரி, காா்த்திகேயன், நாகராஜசோழன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT