உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழிப்புணா்வு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா தலைமை வகித்தாா். ரேடியோ சிட்டி ஆா்.ஜே. மரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா பேசியதாவது:
தாய்மாா்கள் தங்களது குழந்தைகளுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். மருத்துவா்கள் எவ்வளவுதான் முயன்றாலும் எடை குறைந்த குழந்தையின் உயிா் காப்பதில் தாய்ப்பாலை விஞ்சி நிற்பது எதுவுமில்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி ஓா் வரப்பிரசாதம்.
2014ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு 1,100 லிட்டா் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, 1,228 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இதுவரை 450 தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் 1 முதல் 1.5 கிலோ எடைக்கு குறைவாக பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளது. பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்படும் முதல் பரிசை 5 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனை பெற்று வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட தாய்மாா்கள், மாணவா்கள், மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.