கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் திருட்டு

DIN

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சுந்தரம் வீதி அருகே உள்ள கருமலை செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (50). நூற்பாலைக்குத் தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறாா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு காந்திபுரத்துக்கு புதன்கிழமை சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ரமேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT