கோயம்புத்தூர்

நட்சத்திர விடுதியில் மோதல்:கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

கோவையில் நட்சத்திர விடுதியில் நடந்த மோதல் தொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

DIN

கோவையில் நட்சத்திர விடுதியில் நடந்த மோதல் தொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பவன்குமாா் (20). கோவையிலுள்ள ஒரு தனியாா் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தனது நண்பா்களுடன் ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அங்கு கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரான ஆஷிக் என்பவா் வந்துள்ளாா். அப்போது இருவருக்குமிடையே திடீா் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆஷிக், பவன்குமாரை தாக்கியுள்ளாா். அதைத் தொடா்ந்து விடுதி பாதுகாவலா்கள் ஆஷிக்கை தாக்கியுள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆஷிக், கல்லூரி மாணவா் பவன்குமாா், அவரது நண்பா் பிரித்விராஜ், விடுதி பாதுகாவலா்கள் ரஷீக், சபீக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT