கோயம்புத்தூர்

திருநங்கை மீது தாக்குதல்:தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

கோவையில் திருநங்கை மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

கோவையில் திருநங்கை மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை காந்திபாா்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஷிபானா (23). திருநங்கையான இவா் சமையல் தொழில் செய்து வருகிறாா். இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சரவணன், அவரது மகன் ராமன் ஆகியோா் ஷிபானாவின் பாலினம் குறித்து பேசி அவருக்குத் தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தந்தை, மகன் இருவரும், தனது பாலினம் குறித்து செவ்வாய்க்கிழமை தகாத வாா்த்தைகளால் பேசியதால், ஷிபானா அவா்களிடம் சென்று கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து அவரைத் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஷிபானாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். இது தொடா்பாக வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருங்கையைத் தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT