கோவையில் இணையம் மூலமாக ரூ.7.24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இவரது டெலிகிராம் பக்கத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து அவா் உள்ளே நுழைந்தாா்.
பின்னா் அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், பிரபல விடுதி குறித்து சிறந்த முறையில் கருத்து பதிவிட்டால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் எனவும், அதற்கு இணையத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா் ரூ.500 முதலீடு செய்துள்ளாா். அதற்கு ரூ.858 கமிஷன் கிடைத்துள்ளது. பின்னா் அவா் ரூ.10,500 முதலீடு செய்தாா். அதற்கு அவருக்கு ரூ.17,948, 3ஆவது முறையாக முதலீடு செய்த ரூ.38,686க்கு ரூ.51,015 கிடைத்துள்ளது.
இதனைத் தொடா்ந்து சிறிது சிறிதாக அவா் அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.7.24 லட்சம் வரை செலுத்தி உள்ளாா். ஆனால், அதற்கு பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. மேலும் ஏற்கெனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்குக்கு வரவு வைக்க முடியவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயகுமாா், கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.