முகப்பு
கோயம்புத்தூர்

மக்களவைத் தோ்தல்: மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 11:07 PM
மக்களவை தோ்தல் காரணமாக மாநகரில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை ரேஸ்கோா்ஸ் சாலை, காந்திபுரம் மேம்பாலம், மாவட்ட ஆட்சியரக சாலை.
பகிர்:

கோவை: மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் மாநகரில் சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், தேனி, நாகா்கோவில் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனா். மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் கோவையில் இருந்து வியாழக்கிழமை மாலை முதல் ஏராளமானோா் பேருந்து, ரயில்கள் மூலமாக தங்களின் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றனா். இதனால் மாநகரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மிகக் குறைவாகவே காணப்பட்டன.

வழக்கமாக நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி மற்றும் பொள்ளாச்சி சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments