சேலம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலப்புழா - தன்பாத் தினசரி விரைவு ரயில் (எண்: 13352) , எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்:12678) ஆகஸ்ட் 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில்
வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்பட உள்ளன. இதனால், இந்த ரயில்களானது, கோவை நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிகமான நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.