கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம் 71-ஆவது வாா்டுக்குள்பட்ட மக்கள் சாா்பில் பிஸ்கட், தண்ணீா் பாட்டில்கள், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் வயநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தாா். மேயா் கே.ரங்கநாயகி, உதவி ஆணையா் சந்தியா, வாா்டு உறுப்பினா்கள் அழகு ஜெயபாலன் , நவீன்குமாா், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.