முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

Updated On : 9 மார்ச், 2026 at 6:55 PM
பகிர்:

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கான ’டயபா்’ தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கிடங்கில் ’டயபா்’ தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலைக்கு அருகே உள்ள மின்மாற்றியிலிருந்து திங்கள்கிழமை நண்பகலில் தீப்பொறிகள் சிதறியதாக கூறப்படுகிறது. அந்த தீப்பொறிகள், டயபா் தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பஞ்சுக் கிடங்கின் மீது விழுந்தனவாம். இதில் கிடங்கில் இருந்த பஞ்சுகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தகவலறிந்த தூத்துக்குடி, தொ்மல் நகா், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்கு பின்னா் அவா்கள் தீயை கட்டுப்படுத்தினா்.

தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் வெகுநேரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →