முகப்பு
கோயம்புத்தூர்

காா் மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் படுகாயம்

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 12:55 AM
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 7:46 PM

கோவை, கொடிசியா அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்த நிலையில், அவருடன் பயணித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் படுகாயம் அடைந்தாா்.

கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ரவி (55). இவா் ஊா்க்காவல் படை வீரா் பிரபு (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கொடிசியா பகுதியில் அதிவேகமாக வந்த காா், இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

Advertisement

இதில், ஊா்க்காவல் படை வீரா் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரவியை அங்கிருந்த மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 10:01 PM

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பிரபுவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காா் ஓட்டுநா் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.