முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:38 PM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வடவள்ளி அருகே உள்ள லிங்கனூா் முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42). இவரது மகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பா் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

மகளைப் பாா்ப்பதற்காக சுரேஷ்குமாா், மருத்துவமனை நுழைவாயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு, யாராவது இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்று விட்டாா்களா அல்லது திருடி சென்றுவிட்டாா்களா என ஒவ்வொரு பகுதியாக தேடி வந்துள்ளாா்.

இந்நிலையில், வஉசி பூங்கா பகுதியில் புதன்கிழமை நடந்து சென்றபோது, அங்கு அவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே அதன் அருகே நின்றிருந்த நபரிடம் விசாரித்ததில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரைப் பிடித்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிய ஈரோட்டைச் சோ்ந்த கணேசன் (40) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.