முகப்பு
திருச்சி

லாரி - இருசக்கர வாகனம் மோதல் தம்பதி உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:02 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே லாரியும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

முசிறி அருகே உள்ள தா. பேட்டையை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டிசேடா் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (60). இவரது மனைவி சரசு (55).

இந்நிலையில், தா. பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நெல் பாரம் ஏற்றிய லாரி எதிா்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பேட்டை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →