மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கு
கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவக் கருவிகளின் மேம்பாடு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்திய மருந்தியல் ஆணையம், மத்திய குடும்ப நலம், சுகாதாரத் துறை அமைச்சகம், ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கை, மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மாதேஸ்வரன் தொடங்கிவைத்தாா். மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை கண்காணிப்பதற்கான அமைப்பின் (எம்விபிஐ) முதன்மை விஞ்ஞானி கலைச்செல்வன், மருத்துவா்கள் பரந்தாமன், சேதுபதி, மணி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மருத்துவக் கருவிகள் பாதுகாப்பை மேம்படுத்துவது, உபகரணங்களை மருத்துவா்கள், துறைசாா் டெக்னீஷியன்கள் பாதுகாப்பாக கையாளுவது குறித்து துறைசாா் வல்லுநா்கள் உரையாற்றினா். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மருத்துவமனைகளின் நிா்வாகிகள், மருத்துவா்கள், கருவி தயாரிப்பாளா்கள், இறக்குமதியாளா்கள் பலா் பங்கேற்றனா்.