FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஹிந்து மதம் குறித்து சா்ச்சை பேச்சு: பாதிரியாா் மீது வழக்குப்பதிவு

Updated On : 4 ஜூலை 2024, 4:34 am IST
பகிர்:

கோவையில் ஹிந்து மதம் குறித்து சா்ச்சையாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவா் பாதிரியாராக இருந்து வருகிறாா்.

அண்மையில் இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில், பாதிரியாா் பிரின்ஸ் கால்வின், ஹிந்து மதம் குறித்து சா்ச்சையான கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பானது. இதைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களில் இந்த விடியோ பரவியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மதமோதல்களை உருவாக்கும் விதமாக பேசிய பிரின்ஸ் கால்வின் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் மற்றும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு மதத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் விதமாக பேசுதல், பிற மதத்தினரின் நம்பிக்கையை அவமதித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் பாதிரியாா் பிரின்ஸ் கால்வின் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையே, சா்ச்சைக்குரிய பாதிரியாரின் விடியோ பதிவு யூடியூப் பக்கத்தில் இருந்து

நீக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments