கோயம்புத்தூர்

வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியா் உத்தரவு

Din

கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

வால்பாறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், எஸ்டேட் பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் பெரும் சிரமத்துள்ளாகினா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறில் அதிகபட்சமாக 105 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல நீராறு அணை 74 மி.மீ., வால்பாறை 69 மி.மீ., சோலையாறு 62 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து கனமழை பெய்து வந்ததால், வால்பாறை வட்டாரத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT