முகப்பு
கோயம்புத்தூர்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று கோவை வருகை

Updated On : 8 மார்ச், 2024 at 1:10 AM
பகிர்:

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவைக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா். சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை கோவைக்கு வரும் ஆளுநா், தனியாா் கல்லூரியின் பொன் விழா அரங்கு திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கிறாா். பின்னா், கோவை சா்வதேச விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்கிறாா். அவருடன் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறாா். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெறும் 43-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்று மாலையே சென்னைக்குத் திரும்புகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →