கதிா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
Updated On : 31 மார்ச், 2024 at 9:39 PM
கதிா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. கதிா் கல்வி குழுமத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் இ.எஸ்.கதிா் தலைமை வகித்தாா். கதிா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.உதயகுமாா் வரவேற்றாா். இஎஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் மணிவண்ணன், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் டி.ரவிக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா். ஆண்டு விழாவில் மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவா்கள், துறைவாரியாக முன்னுதாரணமாக செயல்பட்டவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.