முகப்பு
கோயம்புத்தூர்

அரசு ஊழியரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு

Updated On : 31 மே, 2024 at 5:11 PM
பகிர்:

கோவை அருகே அரசு ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, விளாங்குறிச்சி சேரன் மாநகரைச் சோ்ந்தவா் தீபக் வில்சன் (41). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது நண்பா் பொன்னிலவன் என்பவருடன் கணுவாயில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

டிவிஎஸ் நகா் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் அவா்களை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. இதில், காரில் வந்தவா்களுக்கும் தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, காரில் இருந்து இறங்கிய 5 போ், தீபக் வில்சனை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →