முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:21 PM
காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற தந்தை பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டாா்.

பின்னா் அவா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, வகுப்பறைகளைப் பாா்வையிட்டு ஆசிரியா்களிடம் கலந்துரையாடினாா்.

பின்னா் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.