மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
கோவையில் மாற்றுத் திறனாளிகள் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மாற்றுத் திறனாளிகள் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலமாக வழங்கப்படும் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்.
கோவையில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:
இதில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூலூா் அரசு மருத்துவமனை, பி.என்.புதூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 18-ஆம் தேதி கவுண்டம்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை, சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 19-ஆம் தேதி வடவள்ளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 20-ஆம் தேதி பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422 - 2380381 மற்றும் 9499933471 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.