முகப்பு
கோயம்புத்தூர்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய்: பொங்கலூரில் தடுப்பூசி முகாம்

Updated On : 2 மார்ச், 2026 at 12:58 AM
பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 8:41 PM

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கான கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பொங்கலூா் வட்டார பொது சுகாதாரத் துறை சாா்பில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக 14 வயது உடைய பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் சுந்தரவேல், டாக்டா் ரம்யா ஆகியோா் கலந்துகொண்டு, தடுப்பூசியின் பயன்பாடு குறித்து விளக்கினா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:58 AM

அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்து சமுதாய நல செவிலியா் சின்னம்மாள், செவிலியா் ஈஸ்வரி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். இந்த வட்டாரத்தில் உள்ள இதர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், எ.வடுகபாளையம், கொடுவாய் ஆகிய பகுதியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா் பூமலா்செல்வன் மற்றும் தரவு உள்ளீட்டாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.