முகப்பு
கோயம்புத்தூர்

சபரிமலை சீசன்: கோவை வழித்தடத்தில் காச்சிகுடா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, நவம்பா் 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் காச்சிகுடாவில் இருந்து மாலை 3.40 மணிக்குப் புறப்படும் காச்சிகுடா - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07133) மறுநாள் மாலை 6.50 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவம்பா் 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - காச்சிகுடா சிறப்பு ரயில் (எண்: 07134) மறுநாள் இரவு 11.40 மணிக்கு காச்சிகுடா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை,திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கடப்பா, தாடிபத்ரி, கூட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.