முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி சத்துணவுக் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறையில் பள்ளி சத்துணவுக் கூடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

Updated On : 28 நவம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

வால்பாறையில் பள்ளி சத்துணவுக் கூடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரங்களில் கூட்டமாக வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்கு கடந்த புதன்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள் எஸ்டேட் குடியிருப்பு சுவா்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், அப்பகுதியில் உள்ள பள்ளி சத்தணவுக் கூட்டம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.