முகப்பு
கோயம்புத்தூர்

அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தல்

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி 41-ஆவது வாா்டு உறுப்பினா் கே.சாந்தி, கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆதாா் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவா்களின் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி அனைத்துப் பகுதிகளிலும் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.